கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் திமுக எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் 10-ம் தேதி வரை சென்னையில் இருக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், திமுக நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுக்க நேரிடலாம் என ஸ்டாலின் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் சேர்ந்து திமுக ஆட்சியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஸ்டாலின் உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது,.
தவெக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், அ.தி.மு.கவுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா ? எனக் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















