தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் - ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்
Jun 22, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
May 8, 2026, 06:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரும்பான்மையோடு வந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஆளுநர், தமிழகத்தில் ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம் என்றும்,
அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆட்சியமைக்க உரிமை கோரி வருவோரிடம் தான் கேட்பது ஒன்றுதான், அது ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்கள் உள்ளனரா என்பதுதான் என்றும் தெரிவித்தார்.

அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதி அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்,அப்படி வரும்போது அவர்களுக்கான எண்ணிக்கை உள்ளதா என்பதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

இன்று எண்ணிக்கையை கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன் என்றும் ஆளுநர் உறுதிபடக் கூறினார்.மெஜாரிட்டி இல்லாதது விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்குமான பிரச்சினை என்றும், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மைனாரிட்டி அரசு ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது எனக் கூறிய ஆளுநர், 118 எம்எல்ஏக்களை கண்முன் நிறுத்துங்கள் என்று நான் கூறவில்லை எனவும்

விஜய் பதவியேற்பை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.

விஜய் மெஜாரிட்டி எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்க தயார் எனவும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன் எனக் கூறியுள்ள ஆளுநர்,எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உத்தரவு தற்போதைய சூழலுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: TVK MAJORITY ISSUEGovernor Rajendra ArlekarVijayTamil Nadu Assembly elections.Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

Next Post

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies