பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பழிதீர்த்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை ஒட்டி இந்திய விமானப்படை வீடியோ வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பாக போர் விமானங்கள் வானில் பறக்கும் காட்சிகள், இலக்குகளை துல்லியமாக தாக்கும் தருணங்கள் மற்றும் இந்திய கடற்படை கப்பல்களின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக 2025-ம் ஆண்டு மே 7 ஆம் தேதி நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூரின் தொடக்க நேரமான அதிகாலை 1:05 மணிக்கே வீடியோ வெளியிடப்பட்டது. அதில், இந்தியா எதையும் மறக்காது; எவரையும் மன்னிக்காது என கூறப்பட்டுள்ளது.
















