புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஊசுடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், ரங்கசாமியிடம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி, அக்கட்சியின் தலைமைக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















