பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
மாநிலத்திலுள்ள ஐந்து கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மொத்தம் 31 பேருக்கு, ஓய்வு பெற்ற துணைநிலை ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதிஷ் குமார் மற்றும் மாநிலத்தில் ஆளும் என்டிஏ கூட்டணியின் பிற மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.
















