இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குததலால் சேதமடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டப்படுவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, பஹாவல்பூரில் உள்ள ஜாமியா சுப்ஹான் அல்லா வளாகத்தில் கனரக இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
தாக்குதலில் சேதமடைந்த மசூதியும் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத் பகுதியில் உள்ள சையத்னா பிலால் மசூதியிலும் மறுகட்டுமான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
















