ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஓராண்டுக்கு முன்பு, நமது ஆயுதப் படையினர் சிந்தூர் நடவடிக்கையின்போது, இணையற்ற தைரியத்தையும், துல்லியத்தையும், உறுதியையும் வெளிப்படுத்தினர் என தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடி மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் அசைக்க முடியாத நிலைப்பாட்டை, ஆபரேஷன் சிந்தூர் வெளிக்கொணர்ந்தது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
















