தமிழ்நாடு உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில், அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அமலில் இருந்தது.
கடந்த 4ம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















