பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வெழுதினர். தமிழகத்தில் புதிய அரசு இன்னும் அமையாத நிலையில், திட்டமிட்டப்படி இன்று +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதுடன், மாணவர்கள் பள்ளிகளில் பதிந்துள்ள செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்கள் மூலமும் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















