தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 9 மற்றும் 10ம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















