மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையை கலைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்
இதுதொடர்பாக மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள உத்தரவில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 174-ன் படி, அமைச்சரவையின் காலக்கெடு முடிவடைவதால், மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையை கலைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்குவங்க தேர்தலில் பாரதிய ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்து 207 இடங்களை கைப்பற்றியது. பாஜகவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத மம்தா பானர்ஜி, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்த சூழலில் மம்தா தலைமையிலான அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சரவையை கலைப்பதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். இதன் காரணமாக மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தின் முன்னாள் முதல்வராக மாறியுள்ளார்.
















