சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கினார். அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சி.வி. சண்முகம், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
















