ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்த அமலில் உள்ளது. இந்தநிலையில் ஹோர்முஸ நீரிணை வழியாக சென்ற 3 அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
















