தவெக தலைவர் விஜயை எதிர்க்க இரு திராவிட கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளன என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், வாழ்நாள் எதிரிகளான அதிமுக – திமுக என்ற இரு திராவிட கட்சிகள் ஒன்றிணைய இருப்பது மக்களுக்காகவோ, மதசார்பின்மைக்காகவோ இல்லை விஜய் என்ற ஒற்றை மனிதரை எதிர்ப்பதற்காக மட்டுமே என தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது பதிவில், இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகார அரசியல் மொழியை காத்துவருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதனை முன்பே கணித்து தான் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதாக தெரிவித்த மாணிக்கம் தாகூர்,
திமுக தனது முகமூடியை இன்றாவது கழற்றுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
















