காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் என பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயில் 1951ம் ஆண்டு மே 11ம் தேதி புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதன் 75வது ஆண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
தெய்வீக திருத்தலமான சோம்நாத் கோயிலில், ஒருமுறை வலம் வருவது பூமியை வலம் வருவதற்கு சமமாக கருதப்படுகிறது எனவும், இந்த கோவில், நம் நாகரிக விழுமியங்களை அனைவருக்கும் உணர்த்துவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இந்தியரும் சோம்நாத் கோவிலுக்கு சென்று பார்வையிட வேண்டும் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
















