முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழு இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்பு குழு ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்படி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையிலான துணை குழுவினர், முல்லைப்பெரியாறு அணையில் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
அது மட்டுமின்றி அணை நீர்த்தேக்கப் பகுதிகளான முல்லைக்கொடி, தானிக்கொடி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவில் தமிழக அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளதால், 12 ஆண்டுகளுக்கு பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆய்வுசெய்ய உள்ளனர்.
















