திமுகவின் தேர்தல் தோல்விக்கு காரணமான ‘பென்’ நிறுவனம் உதயநிதியின் உத்தரவால் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக திமுக தரப்பு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 2022ஆம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனால் பென் நிறுவனம் தொடங்கப்பட்டது என்றும்,
ஆரம்பத்தில், மீடியா ஒருங்கிணைப்பு பணிகளை செய்த பென் நிறுவனம், மெல்ல மெல்ல திமுகவுக்குள் ஊடுருவியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களை கண்காணிக்கும் பணியை பென் நிறுவனம் மேற்கொண்டதால் யாராலும் வெளிப்படையாக பேச முடியவில்லை என்றும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ போன்ற வாசகங்கள் கொண்ட திட்டங்களை கட்சிக்குள் செயல்படுத்தி பென் நிறுவனம் தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது எனவும் கூறப்பட்டுள்ளது.
திமுகவில் எல்லையற்ற அதிகாரம் கிடைத்ததால், கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக அறிக்கை அளித்து ஆட்களை மாற்றியதுடன், தேவையான ஆட்களை நியமித்து கொண்டது என்றும்,
திமுக தலைமைக்கு தெரிந்துவிடக் கூடாது என கருதிய பென் நிறுவன அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு, தவறான அறிக்கைகளை கட்சிக்கு அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பென் நிறுவனத்தின் செயல்பாடுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நம்பியதாகவும்,
ஆரம்பத்தில் இருந்தே உதயநிதிக்கு பென் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவில் பென் நிறுவனம் பரிந்துரைத்த 95 சதவீதம் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்றும், கடந்த 4ஆம் தேதி ஸ்டாலின் வீட்டில் நடந்த கூட்டத்தில் ‘பென்’ நிறுவனம் செய்த தவறுகள் குறித்து, உதயநிதி மிக கோபமாக பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், உதயநிதியின் உத்தரவின்படி பென் நிறுவனம் கலைக்கப்பட்டதாகவும், சபரீசனின் சகோதரி நடத்தி வந்த ‘குன்’ நிறுவனமும் கலைக்கப்படவுள்ளதாகவும் திமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















