மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசு உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















