21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்களை விற்பனை செய்ய கூடாதென டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுக்கூடங்களின் விதிகள் 11A -ன் படி, 21-வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கு ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்க்க வேண்டுமெனவும், அதில் 21வயதிற்கு மேல் இருந்தால் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
((NEXT)) மீறி விற்பனை செய்தால் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
















