பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.15 சதவீதம் மாணவர்களும், 96.47 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 மாணவிகளும், 4 லட்சத்து ஆயிரத்து 214 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் புதுக்கோட்டை மாவட்டம் 97.42 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சிவகங்கை 97.54 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் 97.41 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
97.31 சதவீதம் பெற்று திருச்சி 4ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.30 சதவீதம் பெற்று 5ஆம் இடத்திலும் உள்ளது. தமிழில் 34 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 94 மாணவர்களும், கணிதத்தில் 3 ஆயிரத்து 194 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
அறிவியலில் 10 ஆயிரத்து 476 மாணவர்களும், சமூக அறிவியலில் 3 ஆயிரத்து 336 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
பாட வாரியான விகிதத்தில் தமிழில் 98.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99.44 சதவீதம் மாணவர்களும், கணிதத்தில் 97.36 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
அறிவியலில் 98 சதவீத மாணவர்களும், சமூக அறிவியலில் 97.93 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.34 சதவீத மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 98.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் பள்ளியில் 96.42 சதவீதம் மாணவிகளும், ஆண்கள் பள்ளிகளில் 88.50 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
















