10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், பழனியில் அரசுப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
துணி வியாபாரியின் மகளான அவர், கணிதத்திலும் சமூக அறிவியலிலும் சென்டம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்ததே தனது சாதனைக்குக் காரணம் என கூறிய ஜெயஸ்ரீ, எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
















