அரசுமுறை பயணமாக ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வந்தடைந்தார்.
பிரதமர் மோடி அரசுமுறையாக ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த சுற்றுப்பயணம் மூலம், சர்வதேச வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், ஐந்து நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
















