திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி - அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!
Sep 2, 2026, 04:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் கட்டண ரசீது வழங்கியதில் ரூ.25 லட்சம் மோசடி – அறநிலையத்துறை பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 22, 2026, 07:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்கான வரிசை என, மூன்று வகையில் முருகனை தரிசனம் செய்யலாம். இதில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், 25 லட்சத்து, 24,100 ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை நடத்திய கோவில் இணை கமிஷனர் ராமு, முறைகேட்டில் ஈடுபட்ட மேனகா என்ற ஊழியரை சஸ்பெண்ட் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருச்செந்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில், 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் ஐ.டி.எம்.எஸ்., பயனர் உள்ளிட்ட பயன்படுத்தி, ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதியை தவறாக பயன்படுத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், கோவில் பணியாளர் மேனகா, பணியில் இருந்த நேரத்தில் மட்டும் கட்டண சீட்டுகள் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

அவர், 25 லட்சத்து 24,100 ரூபாய் முறைகேடாக கையாடல் செய்துள்ளார். தொடர்ந்து, மேனகா மே 19ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

தினசரி கட்டண சீட்டு மூலம் பெறப்படும் அறிக்கைகளை, கம்ப்யூட்டர் வழியாக ஆய்வு செய்யாமலும், கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட கட்டண சீட்டுகளை ஒப்பிட்டு சரி பார்க்காமலும் இருந்ததால், கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மேனகா இழப்பு தொகையில், 5 லட்சம் ரூபாயை தானாக முன்வந்து தவறை ஒப்புக் கொண்டு செலுத்தியுள்ளார்.

மீதி தொகையை திருப்பி செலுத்துவதாக அவர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வகையிலும், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வகையிலும், மேனகா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

போலீஸார், மேனகா மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Tags: lord muruganTiruchendur Murugan TempleHindu Religious and Charitable Endowments Departmentfemale employee suspend
Share
Tweet
SendShare
Previous Post

ரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Next Post

சென்னையில் மழைநீர் வடிகால் பணியாளர்கள் மீது தாக்குதல் – தவெக நிர்வாகி மீது போலீசில் புகார்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies