தவெக அரசின் அமைச்சரவையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
தமிழகத்தில் 72 ஆண்டுகளுக்கு பின் முதலமைச்சர் விஜய் தலைமையில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 23 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் அமைச்சராக பதவியேற்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன்படி, பாபநாசம் சட்டமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஷாஜகானும், திண்டிவனம் தொகுதி விசிக எம்எல்ஏ வன்னி அரசுவும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, புதிதாக பொறுப்பேற்ற இரண்டு அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர் ஷாஜகான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்து சிறுபான்மையினர் நலன், வக்பு வாரியம் ஆகியவற்றை கவனிப்பார் என்றும்,
விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராக பொறுப்பு விகித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம் சார்ந்த விவகாரங்களை கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















