முதலமைச்சர் ஜோசப் விஜய் பேட்டரி காரில் சென்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், அங்கிருந்த ஊழியர்களிடம் உரையாடினார். அதனைத் தொடர்ந்தது அங்குள்ள பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தையும் பார்வையிட்டார். அங்கு அவரைக் காண காத்திருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர்.
அதேபோல அருங்காட்சியகம் சென்ற விஜய், அங்குள்ள பழமையான பொருட்களை பார்வையிட்டார். அப்போது, அங்குள்ள அனைத்து துறைகள் பற்றியும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
















