மேற்காசிய போர் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து எரிபொருள் வரத்து தடைபட்டதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாள்களில் 3-ஆவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை 82 காசுகள் அதிகரித்து 105 ரூபாய் 31 காசுகளுக்கும்,
டீசல் விலை 91 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 98 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் இடையூறு நிலவுகிறது.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
















