கடந்த திமுக ஆட்சியில் அறநிலையத் துறையில் நடைபெற்ற முறைகேடு குறித்து தவெக அரசு விசாரணை நடத்த வேண்டுமென இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் கோயில் லட்டு பிரசாத முறைகேடு, திருச்செந்தூர், திருவண்ணாமலை கட்டண ரசீது முறைகேடு குறித்து கடந்த ஆட்சியில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அறநிலையத் துறை அமைச்சர், கடந்த திமுக ஆட்சியில் இந்தத் துறையில் அரங்கேறிய ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டுமென காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
















