மத்திய அரசின் ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு முகாமை காணொலி வாயிலாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி, நாடு முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
ஏற்கெனவே 18 முறை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக சுமார் 12 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி ஆணை வழங்கியது. இந்நிலையில், 19-ஆவது வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகள் பங்கெடுக்க விரும்புவதாகவும், இந்திய இளைஞர்கள் சர்வதேச அளவில் வேலைவாய்ப்பைப் பெற்று அனுபவமிக்கவர்களாக மாற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மின்னணு பொருள்களின் உற்பத்தியில் அரசும், தனியாரும் கூட்டாக முதலீடு செய்வதால், நாடு முழுவதும் வேலைவாய்ப்பு பெருகி, இளைஞர்களின் கனவு மெய்ப்படுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
















