மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் நீடிப்பதால், எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தாழ்தள பேருந்து சேவையை அரசு போக்குவரத்துக் கழகம் பாதியாக குறைத்துள்ளது.
தாழ்தளப் பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலுக்கு மூன்றரை கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்வதால், பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ள காலை மற்றும் இரவு வேளைகளில் அதன் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கோவை கோட்டத்தில் முதல்கட்டமாக 165 பேருந்து சேவையும், சேலத்தில் 22 பேருந்து சேவையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஊதியமும் குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
















