கூட்டுறவு வங்கிகளின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுவதுமாகவும், சிறு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேபோல 60 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
70 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேபோல, 80 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
90 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஒரு லட்சம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மே முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை கடன் பெற்ற 14 லட்சம் விவசாயிகள் பயனடைவர் எனவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















