டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த கோரிக்கை மனுவில் இருந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதற்கு உள்துறை அமைச்சகம் உரிய தெளிவுரையினை வழங்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிஆர்டிஓ-உடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழகத்தில் அமைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டும் திட்டத்தினை அனுமதிக்க கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் காவலில் உள்ள 58 மீனவர்களையும், 266 படகுகளையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















