டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினரை அமைச்சர் நிர்மல்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் துறையில் கணக்கீட்டாளர்கள் பணிக்கு 7 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், ஆயிரத்து 500 பேர் மட்டுமே பணியில் உள்ளதாக தெரிவித்தார்.
மின் துறையில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். தனிப்பட்ட சிலரால் ஏற்பட்ட மின் தடைகள் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது எனக்கூறிய அவர், மின்வெட்டை 7 குழுக்கள் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும், டிரான்ஸ்பார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
















