சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான புதிய சீருடையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டது. ஐஜி பவானீஸ்வரி சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நிலையில், 2 எஸ்பிக்கள் தலைமையில் 36 காவலர்களை கொண்டு சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்களுக்கான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரும் நீல நிறத்தில் அரைக்கை சட்டை, காக்கி கலர் பேண்ட், கருப்பு கலர் பெல்ட், கருப்பு கலர் ஷூ அடங்கிய சீருடைகள் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திரும்பியதும் சிங்கப்பெண் அதிரடிப்படை சீருடை திட்டம் தொடங்கி வைக்கப்படும் எனவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















