கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில் , துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவரது கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
கர்நாடகாவில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே போட்டி எழுந்த நிலையில், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.
சித்தராமையா முதலமைச்சாக பதவியேற்று மூன்றாண்டுகள் ஆன நிலையில், டெல்லியில் ராகுலுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க முன்வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் சித்தராமைய்யா அமைச்சர்களுக்கு காலை விருந்து கொடுத்தார்.
அப்போது, கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதாக சித்தராமையா அறிவித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சித்தராமைய்யா கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அப்போது, அவரை கட்டித்தழுவி தனது ஆதரவை சித்தராமையா தெரிவித்தார்.
















