பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தமிழக அரசு திட்டமிட்டிருந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்ட தொடக்க விழா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த இந்த பிரம்மாண்ட விழா, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒத்திகைகள் மற்றும் அணிவகுப்பு ராஜரத்தினம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த 27-ம் தேதி நடைபெறவிருந்த இந்த தொடக்க விழா, முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி பயணம் மற்றும் பிற நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடக்க விழா நடைபெறும் மாற்று தேதி குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
















