மற்ற கட்சியில் இருந்து ஆட்களை சேர்ப்பது பிள்ளை பிடிக்கும் செயலாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பதவி ஆசைக்காகவே அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தவெக-விற்கு செல்வதாக தெரவித்தார்.
திருமாவளவன் யாரோடு இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசுக்கு பிரதமர் மோடியின் முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும் என்றும், மத்திய – மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய்க்கு மக்கள் பவர் கொடுத்தனர்; ஆனால் அரசு மக்களுக்கு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது என்றும் மக்களின் நம்பிக்கையை பெரும் அளவிற்கு ஆட்சி செய்யுங்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
















