நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
15 ஆயிரத்து 107 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் சர்வதேச எல்லைகளை, மனித உழைப்புடன் மட்டும் கண்காணிக்காமல், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இது ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்களை முழுமையாகத் தடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அதன்படி, எல்லைகளில் ஸ்மார்ட் வேலிகள், நவீன சென்சார்கள், ரேடார்கள் மற்றும் இரவு நேரங்களிலும் தெளிவாகக் கண்காணிக்கக்கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இவை அனைத்தும் ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க, ட்ரோன்களைக் கண்டறிந்து நடுநிலையாக்கும் நவீன தொழில்நுட்பங்களும்,
எல்லையோர சோதனைச்சாவடிகளில் ‘முக அங்கீகார முறை’ மற்றும் மேம்படுத்தப்பட்ட லக்கேஜ் ஸ்கேனர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
















