நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் 9 பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மற்றும் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவில்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மின் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
















