இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இதில் தமிழக முதலமைச்சர் விஜய், மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் மாநிலங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு நகர்ந்து வரும் நிலையில், அனைவரின் கூட்டுப் பொறுப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான சரியான சூழலை உருவாக்குவது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், அதிகாரமளிக்கப்பட்ட இளைஞர்களே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முக்கிய சக்தியாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கின் முக்கிய அடித்தளமாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
















