திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Jun 12, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 12, 2026, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான  உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பினால் கோடிக்கணக்கான முருகபக்தர்களும், தமிழ் மக்களும் பெரும் மகிழ்ச்சிய அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கோடிக்கணக்கான முருகபக்தர்கள் மற்றும் தமிழ் மக்களின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது என்றும், கடந்த 6.1.2026 அன்று. திருப்பரங்குன்ற மலைஉச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ஆர்ப்பரித்து எழுந்தலட்சக்கணக்கான முருகபக்தர்களும், தமிழ் ஆர்வலர்களும் தீபம் ஏற்ற சென்றபொழுது. அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் மலையேறக்கூடாத வகையில் 144 தடை உத்தரவை அன்றைய திமுக அரசு விதித்தது, அதைக் கண்டித்து தன்னெழுச்சியாக மதுரை மாநகர மக்கள் திமுக அரசைக் கண்டித்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த தன்னெழுச்சிமிக்க போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, நமது கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களோடு நானும் கைது செய்யப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்றைய தவெக அரசின் அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும்  ரமேஷ் ஆகியோர் முந்தைய திமுக அரசு சொன்னதைப்போலவே, திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்கள்.

அமைச்சர்களது பேச்சு, தவெக அரசு ஸ்டாலின் அரசின் ஒரு கார்பன் காப்பியாகும் என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், அமைச்சர்கள் பேசிய விதம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயலாகும். அவர்கள்மீது அவதூறு வழக்கு தொடரப்படுமானால், அவர்களது அமைச்சர் பதவிக்களுக்கு ஆபத்தாக முடியும். அதை அறியாமல் தன்னுடைய விருப்பம்போல, வாய்க்கு வந்தப்படி பேசி திரிகிறார்கள் அமைச்சர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்விளைவுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும். என எச்சரிக்கின்றேன்.
ஆகவே, இம்மாதிரியான விரும்பத்தகாத செயல்கள் நடப்பதைத் தவிர்த்து. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக வேண்டும் என தவெக அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

நம்முடைய பெருமைமிக்க கலாச்சாரப் பண்பாடு மற்றும் அழிக்க முடியாத சனாதன பண்புகள் ஆகியவற்றை உச்சநீதிமன்றம் பாதுகாத்து, கொடுத்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு புது எழுச்சியும், புத்துணர்ச்சியும் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,

Tags: Thiruparankundram deepamsupreme courtNainar Nagendran speechnainar nagendran statementBJP State President Nainar Nagendran nainar nagendran on eps
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

Next Post

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

Related News

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies