நீட் மறுதேர்வு வினாத்தாள்கள் தனி ராணுவ விமானத்தில் மதுரைக்கு வந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடைபெற்ற நிலையில் வருகிற 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள்கள், தென் மாவட்டங்களில் நடைபெறும் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணியின் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேவையான வினாத்தாள்கள் அஞ்சல் துறை வாகனம் மூலமாக பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. தேசிய தேர்வு முகமை, தபால்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், அஞ்சல் துறையுடன் இணைந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்து வருகின்றனர்.
















