யூடியூபர்ஸ் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னையை சேர்ந்த பெண்மணி தன்னையும் தனது குழந்தைகளையும் பற்றி யூடியூபர்ஸ் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் ஆகியோர் இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவாக இருந்த முக்தார் அகமதுவும் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். முக்தார் அகமது மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் அடிப்படையில் திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அகமது ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அதன்படி, இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
















