டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தானை சேர்ந்த 7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
தலைநகர் டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் 7 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அனிஸ் தியாகி, மோகித், தீபக் அக்ரொலா, ஆசிப், ஜதன், சபீர் ஆகிய 7 தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, ஆயுதங்கள் மற்றும் பணம் உதவி வழங்கியுள்ளது.பாகிஸ்தான் உளவு அமைப்பின் உத்தரவின் பெயரில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஆயுதங்களுடன் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 7 தீவிரவாதிகளும் சிறையில் அடைக்கப்பட்டதோடு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
















