வங்கதேசத்தில் ஸ்ரீராமர் படம் அவமதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் இந்து அமைப்பினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஸ்ரீராமர் படம் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கைபந்தா மாவட்டத்தில் 81 அடி உயர ஸ்ரீராமர் சிலை அமைக்கும் திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஸ்ரீராமர் படம் அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இந்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
















