தவெகவின் குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வில் அவர் பங்கேற்ற பின்னனர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தவெக ஆட்சியில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கு என்ன அவசியம் இருக்கிறது? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தின் நிதி நிலைமையை பார்த்து முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறினார்.
திரை பிரபலங்களிடம் மட்டுமே முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவதாகவும், நயினார் குறிப்பிட்டார்.
















