பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் என தமிழக அளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தாய் வாழ்த்துடன் 17-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ‘வணக்கம்’ என கூறி உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர், புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய அவர், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர் என தெரிவித்தார்
பேரவையில் மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடைபெறும் என நம்புகிறேன் என்றும், பிரதமரை சந்தித்தபோது தமிழக நலன் சார்ந்த பலவேறு மனுக்களை முதல்வர் விஜய் வழங்கியுள்ளார் என்றும் கூறினார்.
தமிழகத்தின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி அளவை தாண்டியுள்ளது என்றும், ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது என்றும் கூறினார்.
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் வேரூன்றியுள்ளது என்றும், கடந்த திமுக ஆட்சி போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
டாஸ்மாக் துறையில் மடை மாற்றம் செய்யப்பட்ட நிதியை அரசு நிர்வாகத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதன் மூலம் ஏற்கனவே உள்ள வருவாயை விட இருமடங்கு வருவாய் வரும் என்றும், தூய நிர்வாகம் வழங்குவதில் தவெக அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















