தமிழக சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், ‘வாயைத் திறங்க சிஎம்’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜை அணிந்தபடி சட்டப்பேரவைக்கு வந்தனர்.
மேலும், தங்கள் கைகளில், கதறல் கேட்குதா சிஎம்.?, “சிறு பெண்கள் இங்கே, சிங்கப் பெண்கள் எங்கே?”, “ரீல்ஸ் இங்கே…ரியல் எங்கே?” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தவெக அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.
















