மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர், உண்மையான சமூகநீதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் தமிழக அரசு சமூகநீதி சர்வே எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் மெரிட் அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டியும், மழைநீர் வடிகால் மூலமாகவும் நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
















