மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்தார்.
தீர்மானம் வாசிக்கப்பட்ட பின்னர், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
















