மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய்
தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்கமுடியாது என தெரிவித்தார்.
கர்நாடக அரசின் இந்த செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை சட்டப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது என்றும், மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை பேரவை வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
நீதிமன்ற ஆணைபடி காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதல் நீரையோ பயன்படுத்த இயலாது என்றும், விரிப் பிரச்னை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்னை என்றும் அவர் விவரித்தார்.
கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என்றும், விவசாயிகளின் நலனை பாதுகாத்திட அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரவை ஒருமனதாக ஆதரவு அளிக்கிறது என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
















